மாசு படியும்!
கருமுத்து, ராமநாதபுரம், கோவையிலிருந்து எழுதுகிறார்: இன்று தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, முழுவதும் வீட்டுமனைகளின் விலை எவரெஸ்ட் சிகரம் போல உயர்ந்துவிட்டது.தி.மு.க., ஆட்சிக்கு முன் ஒரு ஏக்கர் நிலம் ஒரு லட்சமாக இருந்தது. இன்று 10 லட்சமாகி விட்டது. 10 லட்சமாக இருந்தது ஒரு கோடியாக உயர்ந்து விட்டது. இந்த விலை ஏற்றம் நடுத்தர குடும் பங்களை நடுங்க உள்ளது; இடம் வாங்கி வீடு கட்டுவது என்பது பகல் கனவாகிவிட்டது.
இந்த விலையேற்றத்திற்கு பலவித காரணங்களை கூறுகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர் களாலும், அவர்கள் அனுப் பும் பணத்தாலும் என்கின்றனர். வங்கிகள் வைப்பு நிதிக்கு தரும் வட்டிகள் குறைந்ததால், அதை திரும்ப பெற்று இடத்தின் மேலே போடுவதால், இந்த விலை ஏற்றம் என்கின்றனர்.இடைத்தரகர்களும், அரசியல் பினாமிகளும் தங்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதாலும், வெள்ளை, கறுப்பு ஆவதினாலும் இந்த விலை ஏற்றம் என்கின்றனர். இதனால் விவசாய பூமிகளெல்லாம் பிளாட்டாகும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், பத்திரிகையெல்லாம் பத்தி பத்தியாக கட்டம் போட்டு சதுர அடி என்ன என்பதை விளக்குகிறது. இந்த விலை ஏற்றத்தால், பத்திர பதிவு மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கலாம். ஆனால், நடுத்தர வர்க்கத்தினருக்கு இருக்க இடம் கூட இல்லாத நிலை தான் ஏற்படும்.எனவே, தமிழக முதல்வரும், கூட்டணி கட்சித் தலைவர்களும், இந்த விலை ஏற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லை என்றால், நடுத்தர மக்களின் எதிர்ப்பைத் தான் சந்திக்க வேண்டிவரும்; “நல்லாட்சி’ என்ற பெயருக்கு மாசு படிந்துவிடும்.
Thanks to : http://www.dinamalar.com/2007jan08/ithu.asp